திரும்பவும் வரப்போகிறது இரயில்வே சலுகை. பயணிகள் நிம்மதி


கொரோனா காலத்தில் 
மூத்த குடிமக்களுக்கு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பயண கட்டணத்தில் சலுகையை நிறுத்தி வைத்து இருந்தது இந்திய இரயில்வே துறை.  தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே சலுகையை தர இந்திய இரயில்வே துறை அமைச்சகம் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வருண் காந்தி கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது இரயில்வே துறை அமைச்சர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராளுமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மூத்த குடிமக்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட ஒருசிலருக்கு சலுகைகளை வழங்குவதற்கான செலவு குறித்து ஆய்வு செய்யப்படுவதாக தெரிவித்தார். மீண்டும் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அவர் அறிவித்தார்.

இந்நிலையில் சலுகை குறித்து அறிவிப்பு வெளியாகும் என்ற தகவலை தொடர்ந்து மூத்த குடிமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.